காஸாவில் இனப்படுகொலை – இஸ்ரேல் கண்டனம்.

காஸாவில் இனப்படுகொலை இடம்பெற்று வருவதாக அறிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக்குழு ஆணையத்திற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக்குழுவின் அறிக்கை முற்றிலும் தவறானது என்றும், ஹமாஸ் அமைப்புதான் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ய முயன்றதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.