பொலிஸ் மா அதிபர் சீனா விஜயம்.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சீனாவுக்கு சென்றுள்ளார். சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று திங்கட்கிழமை (15) இரவு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
அதற்கமைய, மத்திய மாகாணம் மற்றும் பொலிஸ் நிர்வாகப் பிரிவின் பொறுப்பாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் ஆய்வாளர் (SDIG) லலித் பத்திநாயக்க, பொலிஸ் மா அதிபரது கடமைகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சீனாவுக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு 20 ஆம் திகதி அவர் நாடு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.




