2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!

பகலிலேயே இருள் சூழ்ந்த அதிசயம் – ஐரோப்பாவில் முழுச் சூரிய கிரகணம்!

NEWS ALERTஉலகம்August 13, 2026 · 2 days முன்2

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்திலும் (UK) ஐரோப்பாவின் பல பகுதிகளிலுமுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அரிய வகை சூரிய கிரகணத்தைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஐக்கிய இராச்சியத்திலிருந்து பார்த்த மக்களுக்குப் பகுதி சூரிய கிரகணத்தைக் காண முடிந்ததோடு, அது பிரித்தானிய நேரப்படி இரவு 7.00 மணிக்குச் சற்றுப் பிந்தி உச்சக்கட்டத்தை அடைந்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் சூரியனின் 90% க்கும் அதிகமான பகுதியைச் சந்திரன் மறைத்திருந்ததைக் காண முடிந்தது. 

எனினும், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகளில் முழுச் சூரிய கிரகணத்தை அனுபவிக்க முடிந்ததாகவும், அந்நேரங்களில் பகல் வேளையிலும் கூட அப்பகுதிகள் முழு இருளில் மூழ்கியமை ஒரு சிறப்புமிக்கக் காட்சியாக அமைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காகத் திரண்ட பெரும் எண்ணிக்கையிலான மக்களிடையே ஆச்சரியக் குரல்களும் ஆரவார ஒலிகளும் எழுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறான அரிய சூரிய கிரகணமானது பிரபஞ்சத்தின் மகத்துவத்தையும் இயற்கையின் விசித்திரத்தையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.