2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

ஹிக்கடுவை கடலில் உயிருடன் மீட்கப்பட்ட உக்ரைன் தாய் மற்றும் மகன்

உள்ளூர்December 28, 2025 · 8 months முன்0

ஹிக்கடுவை, பன்னம்கொட கடற்கரையில் நேற்று முன்தினம் நீராடிக் கொண்டிருந்த ஒரு வெளிநாட்டு பெண் மற்றும் அவரது மகன், கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஹிக்கடுவை பொலிஸின் உயிர்காப்புப் பிரிவினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மதிய நேரத்தில் கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்த உயிர்காப்பு அதிகாரிகள்,
சப் இன்ஸ்பெக்டர் சிறிமல், பொலிஸ் கான்ஸ்டபிள் (87162) திஸாநாயக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (96221) துமிந்த ஆகியோரே இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில், 42 வயதுடைய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும், அவருடைய 14 வயதுடைய மகனும் கடல் அனர்த்தத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.