2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

பதுளை: தன்னார்வ சேவையில் ஆயிரக்கணக்கான இளைஞர்,யுவதிகள்

உள்ளூர்December 28, 2025 · 8 months முன்0

“One Million Volunteers” திட்டத்தின் கீழ் பேரழிவால் பாதிக்கப்பட்ட பதுளையில் சேவை செய்ய ஆயிரம் இளைஞர்கள் இணைந்துள்ளனர்.

பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்திற்கு தன்னார்வ சேவைகளை வழங்கும் நோக்குடன் மேற்படி திட்டத்தின் கீழ், ஆயிரம் இளைஞர்,யுவதிகள் கொண்ட குழு ஒன்று நேற்று இணைந்துள்ளது.

இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர தலைமையில் பண்டாரவெல இளைஞர் படையின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இலங்கை முழுவதும் பல்வேறு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய இளைஞர்கள் கூடி, நேற்றும் இன்றும் பதுளை மாவட்டத்தின் பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதன்போது தோட்ட மற்றும் சமூகஉட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, இளைஞர் அலுவல்கள் பிரதி அமைச்சர் தினிது சமன் ஹென்னாயக்க, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, பதுளை மாவட்ட இளைஞர் சேவை மன்ற அதிகாரிகள், மேலும், நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் திரளாக கலந்து கொண்டனர்.