விஜய் மறைமுகமாக அரசியல் பேசினாரா ?

நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசிய கோலாலம்பூரில் (27) நடைபெற்றது. 80,000 ரசிகர்கள் பங்கேற்றதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன . அரசியல் பேசக்கூடாது மற்றும் தவெக கொடியை கொண்டு வரக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தனர். சில ரசிகர்கள் தவெக கொடியை எடுத்ததால், மலேசியப் பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.
அந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் நடிகர் விஜய் மறைமுகமாக அரசியல் பேசியுள்ளார். அவர் தனது 33 ஆண்டுகளாக உள்ள ரசிகர்களுக்கு நன்றியாற்றி, எதிராளிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், 2026-ல் வரலாறு மீண்டும் நிகழப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.




