2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

புலதிசி மற்றும் எல்ல ஒடிசி மீள சேவையில்

உள்ளூர்January 6, 2026 · 7 months முன்1

புலதிசி நகர் சேர் ரயில் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையிலும் ஒவ்வொரு ஞாயிறுக்கிழமைகளிலும் மட்டக்களப்பு முதல் கொழும்பு கோட்டை வரையிலும் பயணத்தில் ஈடுபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் கேள்விக்கமைய ரயில் பயண தடவைகளை எதிர்காலத்தில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எல்ல ஒடிசி சுற்றுலா ரயில் நாளை முதல் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் அம்பேவளை முதல் பதுளை வரை பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிலவிய அனர்த்தங்களினால் குறித்த ரயில் மார்க்கத்தின் பயண சேவைகள் இதுவரைக் காலம் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.