இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் டி ப்ளீட் (Admiral of the Fleet) வசந்த கரன்னாகொட லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு, பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சிக்கு அனுப்பியமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக வசந்த கரன்னாகொட இன்று ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது அவரிடம் நீண்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.