2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

செயற்கை நுண்ணறிவு கிழக்கு மாகாணத்தில் அங்குரார்ப்பணம்.

உள்ளூர்July 22, 2026 · 3 weeks முன்1

கிழக்கு மாகாணத்தின் மாகாண அரச நிறுவனங்களில் பயன்படுத்துவதற்கும், அலுவலக நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்ட மென்பொருளை அறிமுகப்படுத்தும் தொடக்க விழா, இன்று (22) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, பிரதம செயலாளர் கே.குணநாதன் ஆகியோர்களது பங்கேற்புடன் இடம்பெற்றது.

குறித்த மென்பொருளின் மூலமாக வினைத்திறனான அரச சேவையை முன்னெடுப்பதற்கும் அலுவலக வேலைகளை இலகுபடுத்தவும் சிறந்த உத்தியாக இது காணப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் போது மாகாண பிரதம செயலாளர் கே.குணநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தற்போதைய நடப்பு அரசாங்கத்தின் புதிய உத்தியோகத்தர்களுக்கான கொள்கையாக டிஜிட்டல் மயமாக்கமம் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது இதனடிப்யபடையில் கிழக்கு மாகாணமும் இதில் இதன் மூலமாக முன்னேற்றமடைய வேண்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.