2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது!

உலகம்June 26, 2026 · 2 months முன்2

ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கமானது 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இது டோக்கியோவிற்கு அருகிலுள்ள பகுதிகளை உலுக்கிய போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகளும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன. 

ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மதியம் 12:46 மணிக்கு ஏற்பட்டுள்ளது. 

சிபா மாகாணத்தில் சுமார் 50 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் இருந்ததாக உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டதாக உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.