2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

தேயிலை உற்பத்தியாளர்களுக்கு QR குறியீடு மூலம் உர மானியம்

உள்ளூர்April 9, 2026 · 4 months முன்0

இலங்கையில் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு உர மானியங்களை வழங்கும் முறைமையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய QR குறியீடு முறையானது, உர விநியோகத்தில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த QR முறையினூடாக விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் உர மூடை ஒன்றிற்கு 2,000 ரூபா நிதி மானியம் நேரடியாக வழங்கப்படுகிறது.

கடந்த 2024/2025 முழு ஆண்டிலும் 84,472 விவசாயிகள் மாத்திரமே மானிய உரத்தைப் பெற்றிருந்தனர். ஆனால், புதிய QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் மட்டும் 187,759 விவசாயிகள் உரத்தைப் பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 122.3 வீத வளர்ச்சியாகும்.