2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

ஈரானின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்காவின் அதிரடித் தா#குதல்!

உலகம்June 28, 2026 · 2 months முன்0

ஈரான் மீது அமெரிக்க விமானப் படை அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.ஹோமுஸ் நீரிணையில் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடியாக, இந்த இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இந்தத் தாக்குதலில், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்) களஞ்சியங்கள் இலக்கு வைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஈரானின் கடலோர ரேடார் மையங்கள் மீதும் அமெரிக்கப் படைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘Truth Social’ சமூக வலைத்தளப் பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஈரான் மீண்டும் ஒருமுறை போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ளது. அவர்கள் எதிலிருந்தும் பாடம் கற்கப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இனிவரும் காலங்களில், அவர்களுடன் எந்தவொரு நியாயமான அணுகுமுறையையும் கையாள முடியாது’ என்று அவர் எச்சரித்துள்ளார்.