2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

டுபாயில் கைதான பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் நாட்டிற்கு!

உள்ளூர்January 16, 2026 · 7 months முன்2

டுபாயில் மறைந்திருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவர் மற்றும் நிதி மோசடி விசாரணைக்காகத் தேடப்பட்டு வந்த பெண் ஒருவர், விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டு இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (16) அதிகாலை 05.20 மணியளவில், டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ருடு-226 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் 52 வயதுடைய ரவீன் சமிந்த வீரசிங்க அல்லது ‘புஞ்சா’ என்பவர் அடங்குகிறார். இவர் எல்பிட்டிய, ஊரகஹ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

மற்றொரு நபர் கிரிஅல்தெனியகே டொன் ரசிக சஞ்சீவ குமார அல்லது ‘சூட்டி மல்லி’ எனப்படுபவர். இவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவராவார். இவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தல், கப்பம் கோருதல், கொள்ளை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள்.

இவர்களுடன் மேலதிகமாக, நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைக்காகத் தேடப்பட்டு வந்த இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஹேவா கசகாரகே ருஜா நிஷாமனி த சில்வா என்பவரும் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்த மூன்று சந்தேகநபர்களும் இன்று (16) காலை பலத்த பாதுகாப்புடன் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (ஊஐனு) தலைமையகத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது