வருமானத்தை நிவாரணமாக்கும் ஆப்கானிஸ்தான் அணி !

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் முக்கோண இருபதுக்கு இருபது தொடரில் கிடைக்கும் வருமானத்தை, நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட தமது நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு ஆப்கானிஸ்தான் அணி முன்வந்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ள இத்தொடர் ஓகஸ்ட் 29 திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இத் தொடரில் கிடைக்கும் வருமானத்தையே ஆப்கானிஸ்தான் அணி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து உதவ உறுதியளித்துள்ளது.