2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

பலஸ்தீன் மக்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்ட சம்மாந்துறை மக்கள்.

உள்ளூர்September 20, 2025 · 11 months முன்0

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், “FREE PALESTINE” என்ற தொனிப்பொருளில் அமைதியான “துஆ” பிரார்த்தனையும் மகஜர் கையளிக்கும் நிகழ்வும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், நேற்று வெள்ளிக்கிழமை (19) ஹிஜ்றா ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் இடம்பெற்றது.

இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தத்தின் தொடர்ச்சியாக பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனை எதிர்த்து, பலஸ்தீனருக்கு ஆதரவாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மகஜர், பொதுமக்களிடம் வாசித்து காட்டப்பட்டதுடன், பிறகு குறித்த மகஜரை சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா அவர்களிடம் நேரில் கையளிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில், நம்பிக்கையாளர் சபை உப தலைவர் அல்ஹாஜ் கே.எம்.கே.ஏ.ரம்சீன் காரியப்பர், மஜ்லிஸ் அஷ்ஷுறா தலைவர் அல்ஹாஜ் டாக்டர் ஏ.எம்.எம்.ரஷீத், ஜம்மியத்துல் உலமா சபைத்தலைவர் மௌலவி எம்.எல்.எச்.பசீர் மதனி, பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர், மற்றும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.