2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

நாளை தொடங்குகின்றது சூப்பர் 8 சுற்றுப்போட்டி…

விளையாட்டுFebruary 20, 2026 · 6 months முன்1

T-20 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 8 சுற்று நாளை ஆரம்பமாகிறது. நாளை முதல் மார்ச் மாதம் 01ம் திகதி வரை சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்த சுற்றில் அனைத்து அணிகளும் இரு குழுக்களின் கீழ் போட்டியிடவுள்ளதுடன் முதல் குழுவில் இந்தியா, சிம்பாம்பே, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இடம்பிடித்துள்ளன. இரண்டாவது குழுவில் இங்கிலாந்து, நியுசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் உள்ளன.

இந்நிலையில் சுப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்றும் முதல் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ளது. 2வது போட்டி 25ம் திகதி நியுசிலாந்து அணிக்கு எதிராகவும், 3வது போட்டி 28ம் திகதி பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரின் அரையிறுதிப் போட்டிகள் மார்ச் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் இடம்பெறும். தொடரின் இறுதிப் போட்டி மார்ச் மாதம் 8ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.