2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!

உள்ளூர்June 30, 2026 · 2 months முன்0

தந்திரிமலை ரஜமகா விகாரைக்கு நேற்று (29)பிற்பகல் வருகை தந்து மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், ஜனாதிபதி மின் விளக்குகளை ஏற்றி ஆலோக பூஜையை ஆரம்பித்து வைத்தார்.

தந்திரிமலை ரஜமகா விகாராதிபதி, வடகிழக்கு மாகாணங்களின் உப பிரதம சங்கநாயக்கர் தந்திரிமலே சந்தரதன நாயக்க தேரரின் அனுசாசனத்துடன் இந்த ஆலோக பூஜை நடத்தப்படுகிறது.

இதனுடன் இணைந்ததாக மலர் விளக்கு பெரஹரா மற்றும் பௌத்த பக்தி கீத நிகழ்ச்சியும் இங்கு நடத்தப்பட்டது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, மாராளுமன்ற உறுப்பினர் சேன நாணாயக்கார, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ரஞ்சன ஜயசிங்க, அனுராதபுர மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, மஹவிலச்சிய பிரதேச செயலாளர் சுரிதா பெரேரா, மத்திய நுவரகம்பலாத்த பிரதேச சபையின் தலைவர் சந்திரகுப்த வன்னிநாயக்க, தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கிஹான் த சில்வா மற்றும் விஜய பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் விஜேவர்தன உள்ளிட்ட பெருந்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.