2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறித்து ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை!

உள்ளூர்June 23, 2026 · 2 months முன்1

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ஜனாதிபதியினால் 15 உறுப்பினர்களைக் கொண்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

தெல்கே அசோக பீரிஸின் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல், அரசு ஊழியர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப பொதுச் சேவையில் எவ்வாறான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதே இந்த ஆணைக்குழுவை நிறுவியதன் நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கை அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.