2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

இலங்கையில் இந்த ஆண்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

உள்ளூர்July 30, 2026 · 2 weeks முன்0

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, இவ்வாண்டில் இதுவரை நாடளாவிய ரீதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 84,091 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (29) எத்தகைய டெங்கு மரணங்களும் பதிவாகாத நிலையில், இவ்வருடத்தில் பதிவான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 61 ஆகும். அதிகூடிய எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் 17,850 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 16,716 பேரும் பதிவாகியுள்ளனர்.

அதற்கமைய, மேல் மாகாணத்தில் மாத்திரம் 44,552 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், தென் மாகாணத்தில் இரண்டாவது அதிகபட்சமாக 12,656 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி நாட்டில் 175 அதி அபாய வலயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.