ஈரான் மீது அதிரடித் தாக்குதல்களைத் தொடங்கிய அமெரிக்கா!

ஈரான் தொடுத்த தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் பாரிய மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜோர்டானிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியிலுள்ள கடற்படைக் கப்பல்களை இலக்கு வைத்து ஈரான் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு இந்தத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈராக்கிலுள்ள ஈரான் ஆதரவுக் குழுக்கள் மீது அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதல்களையே இந்த மோதல்களின் பின்னணி என்று சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதோடு, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளும் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன.