2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

கிளிநொச்சியில் புகையிரத்துடன் மோதி ஒருவர் பலி

உள்ளூர்December 23, 2025 · 8 months முன்1

கிளிநொச்சி பளை போலீஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று பரிதாபகரமான விபத்து நிகழ்ந்துள்ளது. காங்கேசன்ந்துயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ் தேவி ரயிலுடன், முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியை கடக்க முயன்ற ஒருவர் மோதுண்டு உயிரிழந்தார்.

இவ்விபத்து நேரத்தின் போது, ரயில் வீதி காவலாளர் அப்பகுதியில் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மக்கள் கூறும் தகவலின் படி, குறித்த பகுதியில் இதுபோன்று சம்பவங்கள் இரண்டு முறை நிகழ்த்தப்பட்டுள்ளன.

இறந்தவர் இரத்தினராசா கிருஷ்ணமோகன், ஆணைப்பந்தி நல்லூர், யாழ்ப்பாணம், வயது 52, குடும்பஸ்தர். சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை பளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.