2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

விசேட சுற்றிவளைப்பு : 779 சந்தேகநபர்கள் கைது!

உள்ளூர்February 1, 2026 · 6 months முன்0

நாடு முழுவதும் பொலிஸாரால் நேற்று (31) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது 779 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் பொலிஸாரால் 28,526 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் விரிவான விபரங்கள் வருமாறு:

குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 11 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 257 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 177 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல்கள்: ழூ மதுபோதையில் வாகனம் செலுத்திய 441 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,039 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த விசேட சுற்றிவளைப்புகள் நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.