பெந்தோட்டையில் ஹெரோயினுடன் இருவர் கைது!

பெந்தோட்டையில் நடத்தப்பட்ட விசேடசோதனை நடவடிக்கையின் போது 5 கிலோகிராம் 105 கிராம் ஹெரோயின் வைத்திருந்த இருநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 மற்றும் 45 வயதுடையவர்கள், பெந்தோட்டையைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




