சோமாவதி வீதிக்கு பூட்டு!

சோமாவதி, சுங்காவில பிரதான வீதி மேலும் வெள்ளத்தில் மூழ்கியதால் அந் வீதியினூடான போக்குவரத்துக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
மகாவலி ஆறு மேலும் நிரம்பி வழிவதால் திக்கலவிலிருந்து 35 முதல் 37 கிலோமீட்டர் வரையிலான பகுதியானது இரண்டரை அடி நீரில் மூழ்கியுள்ளது.
எனவே, சோமாவதி – சுங்காவில வீதியைப் பயன்படுத்தி சோமாவதி விகாரைக்குச் செல்ல விரும்புபவர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.