நீர்கொழும்பு சிறை மோதல்: இந்தியப் பிரஜையின் உடல் அடக்கம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த உம்னிதாத் சரத் சந்திரன் என்ற இந்தியப் பிரஜையின் உடலம், அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
நீர்கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பொது மயானத்தில் கடந்த 2 ஆம் திகதி விசேட பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கு நேற்று (08) நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் 11 சந்தேகநபர்கள் நேற்று பெயரிடப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரை 81 சந்தேக நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுமார் 2,200 வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், காவல்துறையால் கைப்பற்றப்பட்டு அரசாங்க ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ள வழக்குப் பொருட்களுக்கான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.




