மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்பதால், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, மறுஅறிவித்தல் வரும் வரை மீனவர்கள் மற்றும் கடற்படையினர் குறித்த கடற்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.