2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

சந்தை நிலவரம்: எண்ணெய் குறைவு, எரிவாயு உயர்வு

உலகம்June 9, 2026 · 2 months முன்1

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையில் இன்று (09) மாற்றங்கள் பதிவாகியுள்ளன.

உலக சந்தை நிலவரங்களின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90.12 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

அதேவேளை, சர்வதேச சந்தையில் பரவலாக பயன்படுத்தப்படும் Brent ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 93.37 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், இயற்கை எரிவாயு (Natural Gas) விலையிலும் உயர்வு காணப்பட்டுள்ளது.

அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.163 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக உலகளாவிய எரிசக்தி சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் தொடரும் பதற்ற நிலைமை காரணமாக, எதிர்வரும் நாட்களிலும் எரிசக்தி சந்தையில் விலை ஏற்றத் தாழ்வுகள் தொடரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.