2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

நுவரெலியாவுக்கு இந்திய துணைத் தலைவர் விஜயம்

உள்ளூர்April 20, 2026 · 4 months முன்0

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று (20) காலை நுவரெலியா பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக அவர் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டார்.

இதன்போது, இந்திய குடியரசுத் துணைத் தலைவர் மலையக சமூகத்தினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், நுவரெலியா சீதா அம்மன் கோவிலில் இன்று (20) நடைபெறவுள்ள மத வழிபாடுகளிலும் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று (19) இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை வந்தடைந்துள்ள அவர், நேற்று (19) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.