2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

தமிழகத்தில் இலங்கை மீனவர் தாக்கப்பட்ட சம்பவம் : எதிர்ப்பு தெரிவித்த நாமல் ராஜபக்ச

உள்ளூர்April 28, 2026 · 4 months முன்1

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களால் நமது கடற்றொழிலாளர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட காட்சிகள் மிகுந்த கவலையளிப்பதாகவும் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழக கடற்றொழிலாளர்களால் இலங்கை கடற்றொழிலாளர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர், இச்சம்பவம் தொடர்பில் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அவரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கும் இலங்கை அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.