2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

இலங்கை வந்தடைந்தது ஹரியானா 14 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணி!

விளையாட்டுMay 18, 2026 · 3 months முன்0

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 14 வயதுக்குட்பட்டோருக்கான நட்புமுறை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, இந்தியாவின் ஹரியானா மாநில இளையோர் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.

17 வீரர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய இந்த இளையோர் அணி, நேற்று மாலை 04:00 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக நாட்டை வந்தடைந்தது. இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளனர். அத்துடன் ஒரு தீவிர பயிற்சி அமர்விலும் இந்த அணி பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இரு நாட்டு இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர இந்த நட்புமுறை தொடர் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான “ஃபெலிகான்” நிறுவனம் இந்த கிரிக்கெட் தொடருக்கு முழுமையான நிதியுதவி (Sponsorship) வழங்கி ஆதரவளித்துள்ளது. மேலும், இலங்கையின் விளையாட்டுத் தேவையைக் பூர்த்தி செய்யும் நோக்கில், தனது 19-வது சர்வதேச விற்பனை மையத்தை (Outlet) இலங்கையில் திறப்பதற்கும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.