2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று!

உள்ளூர்May 18, 2026 · 3 months முன்0
17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று!

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் 17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (18) வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பொது இடங்களில் ஆத்மசாந்தி பிரார்த்தனைகள், மலரஞ்சலி நிகழ்வுகள், தீபம் ஏற்றுதல் மற்றும் அமைதிப் பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவிடப் பகுதிக்கு பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.