2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

கிழக்கு மாகாண மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

உள்ளூர்January 22, 2026 · 7 months முன்0

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் மருத்துவர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிமுதல் கைவிடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை அடுத்து, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நோயாளர் பராமரிப்பு சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு (Medical Superintendent) எதிராக முன்வைக்கப்பட்டிருந்த புகார்களை அடுத்து, அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பணிப்புறக்கணிப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளரினால் இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.