2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

காசியப்ப தேரரின் விளக்கமறியல் – நீதிமன்றம் உத்தரவு!

உள்ளூர்January 22, 2026 · 7 months முன்2
காசியப்ப தேரரின் விளக்கமறியல் – நீதிமன்றம் உத்தரவு!

திருகோணமலை பௌத்த சிலையுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பில், பலாங்கொடை காசியப்ப தேரர் உள்ளிட்ட இரு தேரர்களை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி பிறப்பித்த உத்தரவின் எழுத்துமூல பிரதி மற்றும் அதன் ஒலிப்பதிவை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

தங்களை விளக்கமறியலில் வைக்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராக காசியப்ப தேரர் உள்ளிட்ட தேரர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ) மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இதன்படி, குறித்த மனுவை மீண்டும் பரிசீலனை செய்வதற்காக இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.