2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

மஹிந்த பராக்கிரம திஸாநாயக்காவிற்கு புதிய நியமனம்

உள்ளூர்January 8, 2026 · 7 months முன்2

கடல்சார், துறைமுகங்கள் மற்றும் விநியோக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க நியமனம்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41(1) வது பிரிவின்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கடல்சார், துறைமுகங்கள் மற்றும் விநியோக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (08) முற்பகல் கையளித்தார்.

கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க, கடல்சார் மற்றும் விநியோகத் துறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அனுபவம் வாய்ந்த நிபுணராவார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான மாநாடு உட்பட சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடனும் அவர் பணியாற்றியுள்ளார். இந்த புதிய பதவியில் அவர் கௌரவ அடிப்படையில் பணியாற்ற இணைந்துள்ளார்.