2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

உலகம்June 11, 2026 · 2 months முன்1

அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் முன்வைத்துள்ள உடன்படிக்கையில் ஈரான் கையெழுத்திடத் தவறினால், நாளை இரவும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அதர் இதனை அதரிவித்ததாக தெரிவிக்கிப்படுகின்றது.

ஈரானுக்குள் இருக்கும் இலக்குகளைத் தாக்குவதற்கு 49 டொஹாக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் சில இலக்குகள் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து வெறும் 40 மைல் (64 கிலோமீற்றர்) தொலைவில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அமெரிக்க போர் வானூர்திகள் ஈரானிய வான்பரப்பில் பறந்து கொண்டிருப்பதுடன், நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெர்சிய வளைகுடாவுக்கு அருகில் உள்ள ரேடார் அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் தமக்கு தொலைபேசி மூலம் அழைப்பு ஏற்படுத்தி, தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.