2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

ஹோர்முஸ் விவகாரம்: சீனா–ஈரான் பேச்சு

உலகம்April 16, 2026 · 4 months முன்0


ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பாக சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று (15) தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர்.

“ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது ஒரு சர்வதேச கோரிக்கை ஆகும். மேலும், ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் ஹோர்முஸ் வழியாக மேற்கொள்ளப்படும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

“நீரிணையின் இயல்பான போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதுதான் சர்வதேச அமைப்புகளின் ஒருமித்த அழைப்பாக இருக்கிறது. தற்போதைய நிலைமை போருக்கும் அமைதிக்கும் இடையிலான ஒரு நெருக்கடியான காலகட்டத்தை எட்டியுள்ளது. இதனால், அமைதிக்கான வாய்ப்பு உருவாகி வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.