2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

புலமைப்பரிசில் பெறுபேறுகளுக்கான பணிகள் தீவிரம்!

உள்ளூர்August 10, 2026 · 4 days முன்0

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் முடிவுகளை, ஒரு மாத காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். 

விடைத்தாள் திருத்தும் நடவடிக்கை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இம்முறை ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நேற்று (09) இடம்பெற்றது. 

இதில் 2 இலட்சத்துக்கு 94 ஆயிரத்து 89 மாணவர்கள் தோற்றி இருந்தனர். 

சிங்கள மொழி மூலம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73 ஆயிரத்து 723 மாணவர்களும் பரீட்சையில் தோற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.