2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

மட்டக்களப்பில் சோகம்!

உள்ளூர்May 13, 2026 · 3 months முன்1

இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அறிவித்துள்ளது.

இன்று (13) காலை 10.00 மணி வரை வெளியிடப்பட்ட அனர்த்த நிலவர அறிக்கையின்படி, மட்டக்களப்பு – கோறளைப்பற்று தெற்கு பகுதியில் இந்த மரணம் பதிவாகியுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி, காலி, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 203 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் 07 குடும்பங்களைச் சேர்ந்த 17 நபர்கள் தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நிலவி வரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக 39 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஒரு சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நிலையமும் சேதமடைந்துள்ளது.

தொடர்ந்து நிலவி வரும் வானிலை மாற்றங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.