2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் தரையிறக்கம்

உள்ளூர்December 17, 2025 · 8 months முன்1

கொழும்பில் இருந்து இஸ்தான்புல் நோக்கிச் சென்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதிகாலை 12:28 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாக தரையிறங்கியது.

இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட இந்த பயணிகள் விமானம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறங்கும் சாதனம் (Landing Gear) செயலிழந்ததாக அறிவித்தது. இதனையடுத்து அவசரகால நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

முன்னெச்சரிக்கை அவசரகாலத் தரையிறக்கத்திற்கு முன்னதாக எரிபொருளைக் குறைப்பதற்காக (burn fuel) விமானம் வானில் சுற்றிக்கொண்டிருந்தது.

விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மருத்துவ அவசரகாலக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. விமானக் குழுவினர் நிலையான அவசரகால நெறிமுறைகளைப் பின்பற்றி வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்தனர்.

துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசர நிலைமை இருந்தபோதிலும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மற்ற விமானங்களின் சேவைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.