2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

தீர்மானப் போட்டியில் இலங்கை போராட்ட ஸ்கோர்!

விளையாட்டுJune 15, 2026 · 2 months முன்1

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் துனித் வெல்லாலகே 28 பந்துகளில் 43 ஓட்டங்களை அதிரடியாக விளாசினார். 

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 170 என்ற வெற்றியிலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. 

முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டி மிகவும் தீர்மானமிக்க போட்டியாக அமைந்துள்ளது.