2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டைகள்!

உள்ளூர்July 1, 2026 · 1 month முன்1

அரச நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவைகளை வழங்குவதற்காக, புதிய சிறப்பு அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபை நடத்திய விசேட கூட்டத்தின் போதே இதற்கான அதிகாரப்பூர்வ தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் இடம்பெற்ற விசேட நிகழ்வின் போதே இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அடையாள அட்டை நடைமுறையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் அரச அலுவலகங்களில் எவ்வித தாமதமுமின்றி தங்களுக்கான தேவைகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படவுள்ளது.