2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

திறைசேரி அறிக்கைக்கு விசேட கவனம்.

உள்ளூர்June 8, 2026 · 2 months முன்0

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில், அரச பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழு இன்று(8) பிற்பகல் கூடவுள்ளது.

திறைசேரியில் இருந்து, சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்தச் சம்பவம் தொடர்பில் திறைசேரியினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை குறித்து கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரை இந்தக் குழுவின் முன்னிலையில் பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை மூன்றாம் தரப்பிற்கு மாறியது தொடர்பான அறிக்கையை திறைசேரியிடம் அரசாங்க நிதி பற்றிய குழு முன்னதாகக் கோரியிருந்ததுடன், அந்த அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.