2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

நாட்டில் வேகமாக அதிகரிக்கும் தோல் புற்றுநோய் பாதிப்பு!

உள்ளூர்May 7, 2026 · 3 months முன்0

நாட்டில் தோல் புற்றுநோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.அதிகப்படியான சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் ஹசந்தி ஜெயலத் இது குறித்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 35,000 தோல் புற்றுநோய் சம்பவங்கள் பதிவாவதுடன், கிட்டத்தட்ட 15,000 உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார்.அத்துடன், தினமும் சராசரியாக 100 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுவது நோயின் தீவிரத்தன்மையைக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சூரிய ஒளி மிகத் தீவிரமாக இருக்கும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க குறைந்தது SPF 30 கொண்ட சூரிய பாதுகாப்பு களிம்புகளை (Sunscreen) பயன்படுத்துவது அவசியம்.

வெளியில் செல்லும் போது தொப்பிகள் மற்றும் தோலை முழுமையாக மூடியிருக்கும் வகையிலான பாதுகாப்பு ஆடைகளை அணியுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.