2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு அதிரடி தடை!

விளையாட்டுJune 2, 2026 · 2 months முன்2

கடந்த ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியின் போது நடுவர் நிதின் மேனனை நோக்கி ஆக்ரோஷமாக ஐஸ் பையை எறிந்த குற்றத்திற்காக, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துடுப்பாட்ட வீரர் டிம் டேவிட்டிற்கு ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் 10ஆவது ஓவரில் விக்கெட் வீழ்ந்தபோது அவர் இவ்வாறு நடந்துகொண்டார்.

இதற்காக அவருக்கு போட்டித் தொகையிலிருந்து 50% அபராதமும், 2 தகுதிக்குறைப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டன.

ஏற்கனவே இந்த சீசனில் ஒழுங்கீனங்களுக்காக புள்ளிகளைப் பெற்றிருந்த டிம் டேவிட்டின் மொத்த தகுதிக்குறைப்பு புள்ளிகள் 5 ஆக உயர்ந்ததால், ஐபிஎல் விதிகளின்படி இந்த ஒரு போட்டித் தடை தானாகவே அமுலுக்கு வந்துள்ளது.

இதனால் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்ற போதிலும், டிம் டேவிட் அடுத்த ஐபிஎல் 2027 தொடரின் முதலாவது போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.