2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

சுகீஸ்வர பண்டார குழுவுக்கு பொலிஸ் அழைப்பு!

உள்ளூர்May 26, 2026 · 3 months முன்1

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, நவ ஜனதா பெரமுனவின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினருக்கு தலாங்கம பொலிஸாரினால் இன்று (26) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது வீட்டிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது சாணத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களினால் திருடப்பட்ட சம்பவம் குறித்து நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த மாதம் 28 ஆம் திகதி இக்குழுவினர் அவரது வீட்டிற்கு முன்னால் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். 

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மலக் சாணத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அங்கிருந்தவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.