2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

வருண ஜயசுந்தரவை கைது செய்ய தீர்மானம் இல்லை – சட்டமா அதிபர்

உள்ளூர்June 12, 2026 · 2 months முன்1


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  வருண ஜயசுந்தரவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சட்டமா அதிபர் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டைச் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.