2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

காணாமல்போன முதியவர் சடலமாக மீட்பு

உள்ளூர்December 30, 2025 · 8 months முன்0

பதுளை, மடுல்சீமை, மஹதொவ தோட்டப் பகுதியில் உள்ள கால்வாயில் திங்கட்கிழமை மாலை அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மடுல்சீமை, மஹதொவ தோட்டப் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முதியவர் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோட்டப் பகுதியில் இருந்த பிரதேசவாசிகள் சிலர், சடலத்தை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

முதியவர் இறுதியாக அணிந்திருந்த ஆடையை பயன்படுத்தி அவரது மகன் சடலத்தை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.