2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

முச்சக்கர வண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

உள்ளூர்April 11, 2026 · 4 months முன்0

கிராந்துருகோட்டே – தெஹியத்தக்கண்டி வீதியில், கிராந்துருகோட்டே விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற பெண் பலத்த காயமடைந்து, கிராந்துருகோட்டே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு உயிரிழந்தவர் தெஹியத்தக்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணாவார். 

விபத்து நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் வேனில் ஆறு பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் வவுனியாவிலிருந்து தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெறவுள்ள கலைந்துசெல்லும் அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்துள்ளனர். 

எவ்வாறாயினும், விபத்தில் வேனில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படாததுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக கிராந்துருகோட்டே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.