2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர காலமானார்

உள்ளூர்April 2, 2026 · 4 months முன்2

தென்னிலங்கையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான மகிந்த விஜேசேகர காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவருக்கு வயது 83 ஆகும்.

இவர் 1989 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

தனது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்புகளை வகித்துள்ளார்.இவர் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தந்தையாவார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு அக்குரஸ்ஸ பகுதியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் மகிந்த விஜேசேகர படுகாயமடைந்தார்.

அதிலிருந்து அவர் உயிர் தப்பிய போதிலும், அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நீண்டகாலமாக உடல்நலக் குறைபாடுகளினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.