2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

ரூ.60 இலட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

உள்ளூர்July 26, 2026 · 3 weeks முன்0

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை ஒருவர் இன்று (26) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 40 வயதுடைய இச்சந்தேகநபர், மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து எயார் ஏஷியா விமான சேவைக்குச் சொந்தமான AK-047 என்ற விமானத்தின் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 அவர் தனது இரண்டு பயணப் பைகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 40,200 சிகரெட்டுகளைக் கொண்ட 201 சிகரெட் கார்ட்டூன்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.

 கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 60 இலட்சத்து முப்பதாயிரம் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 குறித்த சந்தேகநபர் இந்த சிகரெட் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் “பச்சை வழி” ஊடாக எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.

 இதன்போது விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.